காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குப்பையால் சுகாதார சீர்கேடு
குப்பையால் சுகாதார சீர்கேடு
குன்றத்துார் அருகே மாங்காட்டில் இருந்து, மவுலிவாக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் பட்டூர் பகுதியில் குடியிருப்பில் சேகரமாகும் குப்பை கொட்டப்படுகின்றன.மேலும், கோழிகளின் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இந்த பகுதியில் குப்பையை அகற்றி, தொட்டி அமைத்து குப்பையை தினமும் அகற்ற மாங்காடு நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- என்.கண்ணன்,மாங்காடு.