மேலும் செய்திகள்
பூட்டை உடைத்து திருட்டு
30-Dec-2024
அங்காளம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா
09-Dec-2024
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 43 ; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தின இரவு அங்காளம்மன் கோவிலில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நங்கையர்குளம் பகுதியை சேர்ந்த லோகேஷ், 30 ; என்பவர் சரவணனிடம் பீடி கேட்டுள்ளார். சரவணன் பீடி தர தரமறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த லோகேஷ் தான் வைத்திருந்த கத்தியால், அவருடைய கையில் குத்தியுள்ளார். காயமடைந்த சரவணன் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
30-Dec-2024
09-Dec-2024