ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வரும் 8ல் கும்பாபிஷேகம்
கூரம்:கூரம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வரும் மொ் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமம், அரசமர தெருவில், ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி, வரும் 7ம் தேதி, மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது.வரும் 8ம் தேதி, காலை 10:00 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.