உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சுந்தர விநாயகருக்கு இன்று கும்பாபிஷேகம்

சுந்தர விநாயகருக்கு இன்று கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமம், அங்கமுத்து அம்மாள் நகரில் சுந்தர விநாயகர் மற்றும் நவக்கிரஹ மூர்த்திகள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று காலை 10:30 மணிக்கு சுவாமி கரிகோலம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு கணபதி பூஜை, புண்ணியாவசனம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவையும், இரவு 8:00 மணிக்கு பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது.இன்று காலை 7:30 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம், கணபதி ஹோமமும், காலை 10:00 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்படுகிறது.தொடர்ந்து, மஹா அபிஷேகம், மஹாதீப ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் விழா குழுவினர், அய்யங்கார்குளம் கிராமம், அங்கமுத்து அம்மாள் நகரினர் இணைந்து செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை