உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

ஸ்ரீபெரும்புதுார்:வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவிலில், 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்பாலிக்கிறார்.இக்கோவிலில் 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறையினரால் முடிவெடுக்கப்பட்டு, 1.50 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து, 17 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 60 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 சிவாச்சாரியார்களும், ஒன்பது ஓதுவார்களும் இணைந்து யாகசாலை பூஜைகள் நடத்தினர்.அதை தொடர்ந்து, இன்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள், புனிதநீர் கோபுர கலசங்களில் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக பாதுகாப்பு பணிக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை