உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருவாலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருவாலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

ஆற்பாக்கம்:ஆற்பாக்கம் திருவாலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆற்பாக்கம் கிராமத்தில், திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டி ல் உள்ள இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபி ஷேகத்தையொட்டி, நேற்று, காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. மாலை 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜை நடந்தது. நாளை காலை 9:0-0 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கு வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி