தரக்கட்டுப்பாடு ஆய்வில் இரு உரக்கடைகளின் உரிமம் ரத்து
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில், செங்கல்பட்டு வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் சரவணன் தலைமையில் வேளாண் துறையினர் நேற்று, தனியார் உரக்கடைகள் மற்றும் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆய்வு செய்தனர்.யூரியா உள்ளிட்ட உரங்களுடன் இணை உரங்களை கட்டாயமாக விவசாயிகளுக்கு விற்பனை செய்த இரு கடைகளின் உரம் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், உரம் விற்பனை பி.ஓ.எஸ்., கருவிகளில் பில் போட்டு வழங்க வேண்டும். இல்லையெனில் உரிமம் ரத்து செய்யப்படும் என, எச்சரிக்கை விடுத்து சென்றனர்.