உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆட்டோவில் குட்கா விற்றவர் கைது

ஆட்டோவில் குட்கா விற்றவர் கைது

காஞ்சிபுரம்:அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றவரை, போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, பிள்ளைப்பாக்கம் பகுதியில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் கடைகளில், குட்கா விற்பனை சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பிள்ளைப்பாக்கம் தனியார் தொழிற்சாலை அருகே, ஆட்டோவில் குட்கா பொருட்களை விற்ற, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் முத்தமிழ் நகரைச் சேர்ந்த சசிதரன், 36. என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை