உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓரிக்கை மேம்பால சாலை விரிசல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஓரிக்கை மேம்பால சாலை விரிசல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை பாலாறு மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கார், வேன், பேருந்து, லாரி, இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள மேம்பாலம் வழியாக, கட்டுமான பணிக்கு ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களால், சாலையின் இணைப்பு பகுதியில், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடைவெளி அதிகரித்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், மேம்பால சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியில் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். நாளடைவில் விரிசல் மேலும் அதிகரித்தால், மேம்பாலத்தின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.எனவே, ஓரிக்கை பாலாறு மேம்பால சாலையின் இணைப்பு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ