உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புழுதி பறக்கும் சாலைகளில் தண்ணீர் தெளிக்காமல் அலட்சியம்

புழுதி பறக்கும் சாலைகளில் தண்ணீர் தெளிக்காமல் அலட்சியம்

திருமுக்கூடல்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தனியார் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் ஏராளமானவை இயங்குகின்றன.இத்தொழிற்சாலைகளில் இருந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு, கனரக வாகனங்கள் வாயிலாக லோடு ஏற்றிச் செல்லப்படுகிறது.இந்த வாகனங்கள், மதுார், சிறுதாமூர், பட்டா, அருங்குன்றம், பழவேரி மற்றும் திருமுக்கூடல் பாலாற்று பாலம் வழியாக இரவு, பகலாக இயங்குகிறது.இதனால், இந்த கிராம சாலைகள் அடிக்கடி சேதமாவதும், அவ்வப்போது சீர் செய்வதும் வழக்கமாக உள்ளது. சேதமான சாலைகளில் எப்போதும் மண் புழுதி பறந்தபடி உள்ளது.இதனால், இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சுவாச கோளாறு, நுரையீரல் நோய், மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளால் அவதிபடுவதாக புலம்பி வருகின்றனர்.மேலும், இரவு நேரங்களில், மண் புழுதி பார்வையை மறைத்து, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.எனவே, கனரக வாகனங்கள் இயக்கப்படும் கிராம சாலைகளில், காலை, மதியம், மாலை என, நாளொன்றுக்கு மூன்று வேளை தண்ணீர் ஊற்றி, புழுதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ