மேலும் செய்திகள்
அருங்குன்றத்தில் சேதமடைந்த சாலை
06-Jul-2025
உத்திரமேரூர்:புலிப்பாக்கத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை, இரண்டு மாதங்களிலேயே சேதமடைந்துள்ளது.உத்திரமேரூர் ஒன்றியம், புலிப்பாக்கத்தில், சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இச்சாலையை பயன்படுத்தி அப்பகுதிவாசிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலை, ஐந்து மாதத்திற்கு முன் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. மேலும், சாலையோரத்தில் தனியாருக்கு சொந்தமான கிணறுகள், தடுப்புச்சுவர் இல்லாமல் விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்தது.இதனால், சேதமடைந்த சாலையின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்பட்டு வந்தனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்து, சாலையோர கிணறுகளுக்கு தடுப்புச்சுவர் அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, 2024 -- 25ம் நிதி ஆண்டில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் இரண்டு மாதத்திற்கு முன் முடிக்கப்பட்டது.தற்போது, புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமாக அமைக்காததால், இரண்டு இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது.இதன்வழியே தினமும் வாகனங்கள் அதிகமாக செல்வதால், சாலை மேலும் சேதமடைந்து வருகிறது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
06-Jul-2025