உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பல்லாங்குழியான ஏரிக்கரை மண் சாலை

பல்லாங்குழியான ஏரிக்கரை மண் சாலை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில் இருந்து, அரங்கநாதபுரம் கிராமத்திற்கு செல்லும், அய்யனேரி ஏரிக்கரை சாலை உள்ளது.இந்த மண் சாலை வழியாக, சாமந்திபுரம், கொட்டவாக்கம், மூலப்பட்டு, மணியாட்சி, வரதாபுரம், மூலப்பட்டு ஆகிய பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், புள்ளலுார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கணபதிபுரம், சித்துார் ஆகிய கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.இந்த ஏரிக்கரை மண் சாலையை, தார் சாலையாக செப்பணிட வேண்டும் என, பல்வேறு கிராமத்தினர் கோரிக்கை விடுத்தும், நீர்வள ஆதாரத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் செவி சாய்க்கவில்லை என, புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.தற்போது, மழைக்காலம் துவங்க இருப்பதால், ஏரிக்கரை சாலையில் இருக்கும் மண், சாலை பள்ளத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, புள்ளலுார் - அரங்கநாதபுரம் இடையே, ஏரிக்கரை மண் சாலையை, மழைக்காலம் துவங்கும் முன், தார் சாலையாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ