வெள்ளி கவசத்தில் ராமானுஜர்
செவிலிமேடு: ஐப்பசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் செவிலிமேடில் சாலை கிணறு ராமானுஜர் கோவில் உள்ளது. இங்கு ஐப்பசி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவசம் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது.