உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் குறைதீர் கூட்டம் 77 மனுக்கள் மீது தீர்வு

ரேஷன் குறைதீர் கூட்டம் 77 மனுக்கள் மீது தீர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும், நேற்று நடந்த பொது விநியோக குறைதீர் கூட்டத்தில் 77 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மாதந்தோறும், இரண்டாவது சனிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும் பொதுவிநியோக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோக குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் தாலுகாவில் தாமல் கிராமம், உத்திரமேரூரில் பினாயூர், வாலாஜாபாதில் சங்கராபுரம், ஸ்ரீபெரும்புதுாரில் சிறுமாங்காடு, குன்றத்துாரில் மாடம்பாககம் என, ஐந்து தாலுகாவிலும் பொதுவிநியோக குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் என, மாவட்டம் முழுதும் உள்ள ஐந்து தாலுகாவிலும், மொத்தம் 93 மனுக்கள் வரப்பெற்றன. இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 77 மனுக்களுக்கு குறைதீர் கூட்டத்தில் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 16 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ