உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் ரேணுகாம்பாள் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, கோவில் தர்மகர்த்தா மணி மற்றும் விழா குழுவினர் முடிவு செய்தனர். பல்வேறு திருப் பணிகளுடன் சமீபத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு செல்வ விநாயகர், பாலசுப்பிரமணியர் விக்ரஹங்கள் கரிக்கோலம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. நேற்று, காலை 10:30 மணிக்கு கும்ப கலச புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி