உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வள்ளிமேடு கூட்டுச்சாலையில் நிழற்குடை ஏற்படுத்த கோரிக்கை

வள்ளிமேடு கூட்டுச்சாலையில் நிழற்குடை ஏற்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத்:வாலாஜாபாதில் இருந்து, அவளூர் மற்றும் தம்மனுார் வழியாக இளையனார்வேலுார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், வள்ளிமேடு கூட்டுச்சாலை பகுதி உள்ளது.வள்ளிமேடு, இளையனார்வேலுார், காவாந்தண்டலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தினர், இக்கூட்டுச்சாலை பகுதிக்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், வள்ளிமேடு கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் ஏற்கனவே இருந்த நிழற்குடை கட்டடம், சில ஆண்டுகளுக்கு முன், சாலை பணியின் போது இடித்து அகற்றப்பட்டது.அதை தொடர்ந்து, இதுவரை பயணியர் நிழற்குடை கட்டட வசதி ஏற்படுத்தபடாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் பேருந்துக்கு காத்திருக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிபடுகின்றனர்.எனவே, வள்ளிமேடு பேருந்து நிலைய கூட்டுச்சாலையில், பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்த நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதியைச் சேர்ந்த பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை