உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

மழைநீர் வடிகால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

கோனேரிகுப்பம்:கோனேரிகுப்பம் ஊராட்சியில், செடி வளர்ந்துள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, பிரதான சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இக்கால்வாயை முறையாக துார்வாரி பராமரிக்காததால், ஊராட்சி அலுவலகம் அருகில் கால்வாயில் செடி, கோரை புற்கள் வளர்ந்துள்ளன. இதனால், மழை பெய்தால் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழைக்கு முன் மழைநீர் வடிகால்வாயில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, கால்வாயை துார்வாரி சீரமைக்க கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !