உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆர்.எம்.கே., - லயோலா கல்லுாரி அணிகள் டி - 20 கிரிக்கெட் பைனலில் பலப்பரீட்சை

ஆர்.எம்.கே., - லயோலா கல்லுாரி அணிகள் டி - 20 கிரிக்கெட் பைனலில் பலப்பரீட்சை

சென்னை, ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி சார்பில், மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள கல்லுாரி மைதானத்தில் நடக்கின்றன.இதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா, அண்ணா பல்கலை, ஆர்.எம்.கே., - ஆர்.எம்.டி., - சத்தியபாமா, சவீதா, வி.ஐ.டி., மற்றும் லயோலா உள்ளிட்ட 19 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.முதல் அரையிறுதியில் வெற்றி பெற்று ஆர்.எம்.கே., கல்லுாரி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை நடந்த இரண்டாவது அரையிறுதியில், லயோலா 'ஐகாம்' மற்றும் சத்தியபாமா பல்கலை அணிகள் மோதின.டாஸ் வென்ற சத்தியபாமா கல்லுாரி அணி, முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 110 ரன்களை அடித்தது.அடுத்து பேட் செய்த, லயோலா ஐகாம் அணி, துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், 13.1 ஓவர்களிலே, 2 விக்கெட் மட்டுமே இழந்து, 111 ரன்கள் அடித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இன்று காலை நடக்க உள்ள இறுதிப்போட்டியில், ஆர்.எம்.கே., மற்றும் லயோலா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மூன்றாம் இடத்திற்கான போட்டியில் சாய்ராம் - சத்தியபாமா கல்லுாரி அணிகள் மோத உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை