உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மாட வீதியில் வழிந்தோடும் கழிவுநீர் :கோவில் அருகில் சுகாதார சீர்கேடு

 மாட வீதியில் வழிந்தோடும் கழிவுநீர் :கோவில் அருகில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில் வடக்கு மாட வீதியில், ஒரு வாரமாக வழிந்தோடும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில் வடக்கு மாட வீதியில், 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. புதிய ரயில் நிலையம், பஞ்சுபேட்டை, கருப்படிதட்டடை ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், மழைநீர் வடிகால்வாய் வழியாக வெளியேறும் கழிவுநீர், சாலையில் வழிந்தோடு கிறது. இதனால், மழைநீர் கால்வாயுடன் இணைக்கப் பட்டுள்ள நீர் நிலைகளும் மாசடையும் சூழல் உள்ளது. இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், மழைநீர் வடிகால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ