உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பகலிலும் ஒளிரும் தெரு மின்விளக்கு கீழ்கதிர்பூரில் ஊராட்சி நிதி வீணடிப்பு

பகலிலும் ஒளிரும் தெரு மின்விளக்கு கீழ்கதிர்பூரில் ஊராட்சி நிதி வீணடிப்பு

கீழ்கதிர்பூர், காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூரில் ஊராட்சியில் உள்ள தெருக்களுக்கு இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், தெரு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.இதில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்சார்பில் கட்டப்பட்டுள்ள, 2,112 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருமின்விளக்குகளை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பது இல்லை.இதனால், 24 மணி நேரமும் தெருமின்விளக்குகள் தொடர்ந்து ஒளிர்வதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக, மின்சாரம் விரயமாவதுடன், ஊராட்சி நிர்வாகம், மின்வாரியத்திற்கு கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.மேலும், ஊராட்சி நிதியும் வீணாகிறது. தெரு மின்விளக்குகளும் விரைவில் பழுதாகும் நிலை உள்ளது. எனவே,கீழ்கதிர்பூர் ஊராட்சி நிர்வாகம் தெரு மின்விளக்குகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி