உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் வாரச்சந்தை உரிமம் ரூ.3.92 லட்சத்திற்கு ஏலம்

கோவில் வாரச்சந்தை உரிமம் ரூ.3.92 லட்சத்திற்கு ஏலம்

உத்திரமேரூர்:திருப்புலிவனம் வேலாத்தம்மன் கோவில் வாரச்சந்தை உரிமம் 3.92 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.உத்திரமேரூர் தாலுகா, திருப்புலிவனம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், வேலாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது.இந்த சந்தையில் உள்ள கடைகளில் இடம் குத்தகைக்கான, கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான ஏலம் ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான வேலாத்தம்மன் கோவில் வாரச்சந்தை உரிமத்திற்கான ஏலம் நேற்று நடந்தது.உத்திரமேரூர் சரக அறநிலையத் துறை ஆய்வாளர் ப்ரீத்திகா, கோவில் அறங்காவலர் குமார் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. அதில், வாரச்சந்தையில் உள்ள கடைகளில் இடம் குத்தகைக்கான கட்டணம் வசூலிக்கும் உரிமமானது, 3 லட்சத்து 92,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.கடந்த ஆண்டு, 3 லட்சத்து 60,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !