உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சென்னை ஏர்போர்ட்டில் துருவி துருவி சோதனை விமானங்கள் தாமதம்

 சென்னை ஏர்போர்ட்டில் துருவி துருவி சோதனை விமானங்கள் தாமதம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சர்வதேச விமான சேவை தாமதமாவது வாடிக்கையாக மாறி வருகிறது. இதனால் பயணியர் அவதியடைந்து வருகின்றனர். புதுடில்லியில் நடந்த பயங்கரவாத கார் குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து, இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு, சமீப நாட்களாக தொடர் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் பதிவாகி வருவதால், பயணியரிடம் சோதனைகளும் கூடுதலாக்கப்பட்டு உள்ளது. இதனால், சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு புறப்படும் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டு வருவது, வாடிக்கையாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால், சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை, ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகருக்கு செல்லும் விமானம், துபாய், கோலாலம்பூர், சிங்கப்பூர், தோஹா, தாய்லாந்து, சார்ஜா, அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங் க ளுக்கு செல்லும் விமானங் கள், 45 நிமிடங்களில் இருந்து, ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ