மேலும் செய்திகள்
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி
10-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவபெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது.இக்கோவிலில், கூரத்தாழ்வானின் 1,015வது திரு அவதார மஹோத்ஸவம், 11ம் தேதி, திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடுடன் துவங்கியது.தினமும் காலையில் பல்லக்கிலும், இரவு சிம்மம், யாளி, மங்களகிரி, கமலாசனத் தொட்டி, சூரிய பிரபை, குதிரை வாகனத்திலும் கூரத்தாழ்வான் உலா வந்தார்.விழாவில், ஒன்பதாம் நாள் பிரபல உற்சவமான தேரோட்டம், வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில், காலை 7:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் கூரத்தாழ்வான் எழுந்தருள்கிறார்.பல்வேறு பூஜைகளுக்குப் பின், முக்கிய வீதிகள் வழியாக பவனி வருகிறார். மாலை 3:00 மணிக்கு திருமஞ்சனமும், திருப்பாவை சாற்றுமறையும் நடக்கின்றன. இரவு ஹம்ஸ வாகனமும், திருமொழி சாற்றுமறையும் நடக்கின்றன.
10-Jan-2025