உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில், குட்கா விற்பனை செய்யப்படுவாக, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, சிவபுரம் பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹான்ஸ், விமல், கூலிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து, 15,000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் குமார், 38, என்பரை கைது செய்தனர்.அதேபோல், மொளச்சூர், கருமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள டீக்கடையில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் சண்முகம், 52, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை