குடிநீர் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி, பருத்திகுளம் பகுதியில், கூடுதல் குடிநீர் ஆதாரத்திற்காக, எட்டு ஆண்டுகளுக்கு முன் சிறுமின் விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அப்பகுதியினர் வீட்டு உபயோக கூடுதல் தேவைக்கு குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக, ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது.இதனால், வீட்டு குழாயில் குடிநீர் வராத நாட்களிலும், கூடுதல் தண்ணீர் தேவைக்கும் வேறு பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டியுள்ளது.எனவே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பருத்திகுளத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.