சிறுகாவேரிபாக்கத்தில் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர்
சிறுகாவேரிபாக்கம், காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம், பச்சையம்மன் கோவில் பின்புறம் உள்ள பிரதான சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களுக்கும் மேலாக சாலையில் வீணாக குடிநீர் வழிந்தோடி வருகிறது.தொடர்ந்து வெளியேறும் குடிநீரால், மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்துள்ளது. மேலும், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.