உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குளத்தில் கழிவுநீர் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

குளத்தில் கழிவுநீர் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில் உள்ள சந்தைமேடு அருகே நந்தவன குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.இக்குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து தண்ணீரில் பாசி படர்ந்து இருந்தது. இதை சீரமைக்க அப்பகுதிவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, 2019ம் ஆண்டில், 10 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. தற்போது, இந்த குளம் முறையாக பராமரிப்பு இல்லாமலும், ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் வாயிலாக, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் குளத்தில் கலந்து வருகிறது.மேலும், குளத்தின் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது, குழாய் வாயிலாக குளத்தில் விடப்பட்டு வருகிறது. இதனால், குளத்தின் நீர் மாசடைந்து, கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.எனவே, நந்தவன குளத்தில் கழிவுநீர் விடுவோர் மீது, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி