/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புகார் பெட்டி : நிழற்குடை முன் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?
புகார் பெட்டி : நிழற்குடை முன் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் --- வந்தவாசி நெடுஞ்சாலையில், மாங்கால் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.தற்போது, இந்த பயணியர் நிழற்குடை முறையாக பராமரிப்பு இல்லாமலும், அதன் முன் செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால், பேருந்துக்காக வரும் பயணியர் உள்ளே செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, பயணியர் நிழற்குடை முன் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- எம். சுந்தரவதனம்,மாங்கால்.