மேலும் செய்திகள்
அரசு கட்டடம் படுமோசம் இடித்து அகற்ற கோரிக்கை
16-Mar-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தனஞ்சேரி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலகம் அருகே, மகளிர் சுயஉதவிக் குழு கட்டடம் உள்ளது. 20 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடத்தை, அப்பகுதி மகளிர் சுயஉதவிக் குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, மகளிர் சுயஉதவிக் குழு கட்டடம் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கட்டட கூரையில், கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.பழுதடைந்த நிலையில் உள்ள இக்கட்டடம், எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தை அகற்ற, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16-Mar-2025