உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி /  நடன கலைஞரை ஏமாற்றிய இன்ஜினியர் கைது

 நடன கலைஞரை ஏமாற்றிய இன்ஜினியர் கைது

நாகர்கோவில்: பெண் நடன கலைஞரை காதலித்து ஏமாற்றிய இன்ஜினியரை, போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், புல்லன்விளையை சேர்ந்தவர், அபிஷ், 30; இவரின் மனைவி, ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த, 24 வயது பெண் நடன கலைஞருடன், அபிஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது, தனக்கு ஏற்கனவே திருமணமான விபரத்தை மறைத்து, அந்த பெண்ணுடன் அந்த நபர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கர்ப்பமான அந்த பெண், திருமணத்திற்கு வற்புறுத்திய போது, அபிஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் அளித்த புகாரை விசாரித்த போலீசார், அபிஷை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை