மேலும் செய்திகள்
விழிப்புணர்வு பேரணி
08-Jan-2025
ஆட்சி மொழி சட்ட வார விழா பேரணிகல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்புகரூர்: கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சி மொழி சட்ட வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.கரூர் அரசு கலைக்கல்லுாரியில் இருந்து தொடங்கிய பேரணியை, கலெக்டர் தங்கவேல் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து நகரின் வழியாக சென்ற பேரணி, மீண்டும் கல்லுாரி வளாகத்தை அடைந்தது.பேரணியில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜோதி, கல்லுாரி முதல்வர் சுதா, கவிஞர் செல்வம் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
08-Jan-2025