இரவில் நிற்காமல் செல்லும் பஸ்க.பரமத்தியில் பயணிகள் தவிப்பு
இரவில் நிற்காமல் செல்லும் பஸ்க.பரமத்தியில் பயணிகள் தவிப்புகரூர்கரூர்- - கோவை நெடுஞ்சாலையில், 18வது கி.மீ., துாரத்தில் க.பரமத்தி உள்ளது. இப்பகுதியில் மத்திய அரசு அலுவலகம், வங்கிகள், தனியார் கல்லுாரிகள், அரசு, தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், க.பரமத்தியில் வேலை நிமித்தமாக தினமும், 1,000க்கும் மேற்பட்டோர், கரூர் உட்பட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள், கரூர், கோவை, திருப்பூர், செல்ல, க.பரமத்தி பஸ் ஸ்டாப்பிலிருந்து புறப்பட வேண்டும்.பகலில், ஒரு சில பஸ்கள் மட்டும், க.பரமத்தியில் நின்று செல்லும். இரவு நேரத்தில் கோவை, திருப்பூர், கரூரில் இருந்து செல்லும் பஸ்கள், க.பரமத்தியில் நிறுத்தப்படுவது இல்லை. இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர். பகல் நேரங்களில் தனியார், டவுன் பஸ்கள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் சமாளித்து கொள்கின்றனர். இரவு டவுன் பஸ் இயக்கம் நிறுத்தப்படுவதல், புறநகர் பஸ்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலையுள்ளது. அந்நேரத்தில் பஸ்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. எனவே, க.பரமத்தியில் அரசு, தனியார் பஸ்களை நிறுத்தி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.