தொடர் மழையால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது
தொடர் மழையால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியதுகரூர்:கரூர் மாவட்டத்தில் பெய்த, தொடர் மழை காரணமாக, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது. கடந்த இரண்டு நாட்களாக, கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருதிறது. குறிப்பாக, அமராவதி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி வட்டாரங்களில் நல்ல மழை பெய்தது. இதனால், கரூர் அருகே உள்ள, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து காரணமாக நேற்று முன்தினம் நிரம்பியது. * திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 192 கன அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 51.74 அடியாக இருந்தது.* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 635 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. அதில், 210 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்கால்களில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 10.52 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், இரண்டு நாட்களாக பெய்த மழையால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.