உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேதமடைந்த பூங்கா உபகரணங்கள்சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

சேதமடைந்த பூங்கா உபகரணங்கள்சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

சேதமடைந்த பூங்கா உபகரணங்கள்சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்புகரூர்:கரூர் அருகே, பராமரிப்பு இல்லாமல் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-வெள்ளியணை சாலை, தான்தோன்றிமலை அரசு குடியிருப்பு வளாகத்தில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக, பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது. அதில், சிறுவர், சிறுமியர் விளையாட வசதியாக, விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி செய்யவும் தனியாக சாதனங்கள் இருந்தன. இந்நிலையில், பூங்காவில் தற்போது விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளன. அதை, சிறுவர்களால் பயன்படுத்த முடியவில்லை. அந்த பகுதியில், வேறு பொழுது போக்குக்கான இடம் இல்லாததால், பூங்காவில் உள்ள பழுதான உபகரணங்களை, உடனடியாக சரி செய்ய, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ