மேலும் செய்திகள்
காய்கறி சாகுபடி பணி தீவிரம்
14-Feb-2025
மகிளிப்பட்டி கிராமத்தில் வெண்டை சாகுபடி தீவிரம்கிருஷ்ணராயபுரம்:மகிளிப்பட்டி கிராம பகுதிகளில், வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள, வெண்டைக்காய்களை பறித்து உள்ளூர் வாரச் சந்தைகளில் விற்கப்படுகிறது. வெண்டைக்காய் கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
14-Feb-2025