கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்பூக்கள் விலையில் மாற்றமில்லை
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்பூக்கள் விலையில் மாற்றமில்லைகிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், காட்டூர், செக்கணம், எழுதியாம்பட்டி, சேங்கல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூக்கள் பறிக்கப்பட்டு கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் பூ மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. நேற்று விரிச்சிப்பூக்கள் கிலோ, 90 ரூபாய், செண்டுமல்லி, 40 ரூபாய், சின்ன ரோஜா, 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பூக்கள் விலை உயராமலும், குறையாமலும் சீரான விலையில் விற்பனை நடப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.