புன்னம்சத்திரம் பிரிவு சாலையில்ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
புன்னம்சத்திரம் பிரிவு சாலையில்ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்கரூர்:புன்னம் சத்திரத்தில், பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.கரூர்--ஈரோடு நெடுஞ்சாலையில் புன்னம்சத்திரம் பிரிவு சாலையில், புகழூர் காகித ஆலை மற்றும் வேலாயுதம்பாளையம் செல்லும் சாலை உள்ளது. கரூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், ஈரோடு, அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், புகழூரில் உள்ள காகித ஆலைக்கு பல்வேறு வகையான மூலப்பொருட்களை லாரிகளில் ஏற்றி இந்த பிரிவு சாலை வழியாக நாள்தோறும் கொண்டு செல்கின்றனர்.மேலும் இவ்வழியாக ஏராளமானோர் கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ், பள்ளி, கல்லுாரி பஸ்கள் சென்று வருகின்றன. இதேபோல், புகழூர் காகித ஆலையில் தயாரிக்கப்படும், காகித ரோல்களை ஏற்றிக்கொண்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு இச்சாலை வழியாக வாகனங்கள் செல்கின்றன. இந்த சந்திப்பு சாலையில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, புன்னம் சத்திரம் பிரிவு சாலையில் ரவுண்டானா அமைத்து, விபத்தை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.