மேலும் செய்திகள்
அரசு அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
09-Mar-2025
புன்செய் புகழூர் பள்ளியில்மக்களை தேடி மருத்துவம்கரூர்:வாங்கல் வட்டார சுகாதார துறை சார்பில், மக்களை தேடி மருத்துவ முகாம், புன்செய் புகழூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது.புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன் முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு இயன்முறை மருத்துவம், இதயநோய், மூட்டுவாத நோய் உள்ளிட்ட, பல்வேறு நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. 10க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று, பிசியோதெரபி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
09-Mar-2025