உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாகனங்களுக்கு நிலுவையிலுள்ள ஆன்லைன் இணைக்க கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்

வாகனங்களுக்கு நிலுவையிலுள்ள ஆன்லைன் இணைக்க கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்

கரூர்: வாகனங்களுக்கு, நிலுவையிலுள்ள ஆன்லைன் இணைக்க கட்ட-ணங்களை உடனடியாக செலுத்திட வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் கூடுதல் போக்குவரத்து ஆணையர் கடிதத்தில், போக்குவரத்து விதிகளை மீறி பொதுச்சா-லையில் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு, நிலுவையிலுள்ள ஆன்லைன் இணைக்க கட்டணங்கள் உடனடியாக செலுத்திட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் தங்களது வாகனங்களுக்கு ஆன்லைன் மூலமாக செலுத்துவதற்கு ஆதார் எண்ணில் உள்ள மொபைல் எண்ணில், தங்களது வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலகங்-களில் அனைத்து வேலை நாட்கள் மற்றும் சனிக்கிழமைகளில் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இவ்-வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !