உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்குளித்தலை,:குளித்தலை அடுத்த, மணவாசி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார், 28. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி, 26. இவர்களுக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு மாதத்துக்கு முன்பு, அவரது தாய் வீடான திருச்சி சமயபுரத்திற்கு செல்வதாக அன்னக்கிளி கூறி சென்றவர், இதுவரை வீட்டிற்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என, நந்தகுமார் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி