உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெண்டைக்காய் சாகுபடி விவசாயிகள் மும்முரம்

வெண்டைக்காய் சாகுபடி விவசாயிகள் மும்முரம்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், வெண்டைக்காய் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், அந்தரப்பட்டி, பஞ்சப்பட்டி, வீரியபாளையம், குளத்துார், மலையாண்டிப்பட்டி, வேங்காம்பட்டி, புதுப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. இதற்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. வெண்டைக்காய் செடிகளில் காய்கள் பிடித்துள்ளது. பிஞ்சு காய்கள் பறிக்கப்பட்டு விவசாயிகள் உள்ளூர் வார சந்தைகளில் விற்று வருகின்றனர். இதில் வெண்டைக்காய் கிலோ, 30 ரூபாய்க்கு விவசாயிகள் விற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை