உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர் தலைமை தபால் நிலையம் முன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாட்டில் நடக்கும் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டித்தும், ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். மயிலாடுதுறை அருகே சாந்தங்குடியில் நடந்த இரட்டை ஆணவ படுகொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், இ.கம்யூ., மாவட்ட துணை செயலர் செல்வம், மாவட்ட பொருளாளர் நாட்ராயன், மாவட்ட செயலாளர் பாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ