உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கஞ்சாவைத்திருந்த இருவர் கைது

கஞ்சாவைத்திருந்த இருவர் கைது

கஞ்சாவைத்திருந்த இருவர் கைதுகரூர்:வாங்கல் அருகே, கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வாங்கல் போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் காவிரியாறு காளியம்மன் கோவில் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்த முத்துசாமி, 40; தென்பாகம் பகுதியை சேர்ந்த செந்தமிழன், 28; ஆகிய இரண்டு பேரை, வாங்கல் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து, 100 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை