உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார் கவிழ்ந்து விபத்து4 பேர் படுகாயம்

கார் கவிழ்ந்து விபத்து4 பேர் படுகாயம்

அரவக்குறிச்சி,: கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஆனைக்கால் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார், 26. இவர், உறவினர்களுடன், காரில் கேரள மாநிலம் சென்று கொண்டிருந்தார்.காரை, நரேன்குமார், 41, ஓட்டினார். அரவக்குறிச்சி அருகே, கணவாய் மேடு பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, டயர் பஞ்சராகி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராம்குமார், நரேன்குமார், இவரது மனைவி ஆர்த்தியா, இவரது மகன் சோமசேகர் ஆகிய, 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் நால்வரையும் மீட்டு, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை