அய்யர்மலை ரோப் கார் செயல்பாட்டுக்கு வருமா?
குளித்தலை: குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், ரத்தினகிரீஸ்-வரர் மலைக்கோவில் உள்ளது. இக்கோவில் செங்குத்தாக, 1,017 படிகளை கொண்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மலை ஏற முடியாமல் சிரமப்-பட்டு வந்தனர். இதையடுத்து, ரோப் கார் வசதி ஏற்படுத்தப்-பட்டு, கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மறுநாள் அதிகளவு காற்று வீசியதால், ரோப் கார் தடம் புரண்டது. இதனால் ரோப்கார் வசதி நிறுத்தப்-பட்டது.இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொழில் நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர். அதிகளவு காற்று வீசியதால் பழுது ஏற்பட்டதாகவும், விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என, குழுவினர் தெரிவித்தனர்.ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாகியும் செயல்பாட்டுக்கு வர-வில்லை. விரைவில் பயன்பாட்டுக்கு திறக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.