கால்நடைகளுக்கு தடுப்பூசி
கிருஷ்ணராயபுரம்:சரவணபுரம் பகுதியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சரவணபுரம் பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு, கால்நடைத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட பசு மாடுகளை விவசாயிகள் அழைத்து வந்தனர்.