போதை மாத்திரை வாலிபர் ௨ பேர் கைது
ஈரோடு: மொடக்குறிச்சி போலீசார், நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது சந்தேகத்துக்கு இடமான மொடக்குறிச்சி, மஞ்சகாட்டு வலசு, நேரு வீதி சிவகுமார், 22; மஞ்சகாட்டு வலசு, ஒரத்தி மேடு பிரிதிவிராஜ், 19, ஆகியோரிடம் சோதனை செய்ததில், 20 வலி நிவாரணி மாத்திரை, 5 சிரிஞ்ச் இருந்தது. மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்த திட்டமிட்டதும் தெரிந்-தது. அவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.