உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தலைமை முடிவெடுக்கும்: கரூர் எம்.பி

தலைமை முடிவெடுக்கும்: கரூர் எம்.பி

.,கரூர்: ''வி.சி., நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்-பது குறித்து, காங்கிரஸ் தலைமை முடிவெ-டுக்கும்,'' என, கரூரில் எம்.பி.,ஜோதிமணி தெரிவித்தார்.கரூர், ஜவஹர் பஜாரில் உள்ள கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்-பனை சங்க கட்டடத்தில், தமிழ்நாடு கூட்டுறவு துணை பயிற்சி நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், கரூர் எம்.பி.,ஜோதிமணி பங்-கேற்ற பின், நிருபர்களிடம் கூறியதாவது: விடு-தலை சிறுத்தைகள் கட்சி நடத்தும், மது ஒழிப்பு மாநாடு வரவேற்கத்தக்கது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் தேவையில்லை. மது ஒழிப்பு மாநாட்டில், காங்கிரஸ் பங்கேற்பது தொடர்பாக கட்சி தலைமை முடிவெடுக்கும். முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார். நாடு திரும்-பியுடன், அவருக்கும் மாநாட்டிற்கான அழைப்பு தரப்படும் என நினைக்கிறேன். கரூருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான கோரிக்கை, மத்-திய அரசிடம் கடந்த ஐந்தாண்டுகளாக வைக்கப்-பட்டு வந்தது. தற்போதும் அது குறித்து கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எந்த அரசு ஆட்-சியில் இருந்தாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ