மேலும் செய்திகள்
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை
23-Aug-2024
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சீரான விலையில் வெற்றிலை விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், லாலாப்பேட்டை, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, வீரகுமாரன்பட்டி, வீரவள்ளி, மகாதானபுரம், மகிளிப்பட்டி ஆகிய இடங்களில் விவ-சாயிகள் வாய்க்கால் பாசன முறையில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடி செய்யப்பட்ட வெற்றிலை கொடி-களில், வளர்ந்து தரமான வெற்றிலை கிடைத்து வருகிறது. மழை காரணமாக பசுமையாக வளர்ந்து, வெற்றிலைகள் பறிக்கப்பட்டு லாலாப்பேட்டை வெற்றிலை கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வாரம், 100 கவுளி கொண்ட வெற்றிலை மூட்டை, 5,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த வாரம், 100 கவுளி கொண்ட மூட்டை, 5,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில்லறை விற்பனைக்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, கரூர், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களுக்கு வெற்றிலைகள் கொண்டு சென்று விற்கப்படுகிறது.
23-Aug-2024