ரூ.20.78 லட்சம் மதிப்புள்ளநிலக்கடலை ஏலம்
ரூ.20.78 லட்சம் மதிப்புள்ளநிலக்கடலை ஏலம்கரூர்:கரூர், க.பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நிலக்கடலை சாகுபடி நடக்கிறது. இங்கு, உற்பத்தியாகும் நிலக்கடலையை, நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விற்பனை செய்கின்றனர்.நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், 885 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 61.30 ரூபாய், அதிகபட்சமாக, 74.30 ரூபாய், சராசரியாக, 73.09 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 29 ஆயிரத்து, 834 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 20 லட்சத்து, 78 ஆயிரத்து, 861 ரூபாய்க்கு விற்பனையானது.